;
Athirady Tamil News

குறைந்த பஸ்களே இன்றும் ஓடும் !!

0

எரிபொருள் இன்மை காரணமாக, இன்றைய தினமும் தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் போதுமானளவு எரிபொருள் கிடைத்தால் நாளை வழமையாக பஸ் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெசக் தினத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்றிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அகில இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இன்று பகலுடன் ஆரம்பிக்கப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.