;
Athirady Tamil News

ரணிலின் பின்னணியில் செயற்படவில்லை: சம்பந்தனிடம் பாக்லே தெரிவிப்பு !!

0

ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக பலரும் கூறுகின்ற போதும் தாங்கள் அவ்வாறு எந்தவித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை எனவும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் யார் பிரதமராக பதவியை பொறுப்பேற்றாலும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனிடத்தில் தெரிவித்துள்ளாராம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, நாட்டின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். அதன்போதே இந்த விடயங்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. ஓர் உறுதியான அரசாங்கம் அமையப் பெற வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும். ஓர் உறுதியான அரசாங்கம் அமையப்பெற வேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம்.அதேவேளை, பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம்“ என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.