;
Athirady Tamil News

பாகிஸ்தானில் இருந்து டிரோன்களில் ஆயுதம் சப்ளை: தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

0

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் டிரோன்கள் மூலம் காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்களை வீசி வருகின்றன. காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான எதிர்ப்பு முன்னணி என்ற பயங்கரவாத அமைப்புக்கு டிரோன்களில் ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த மே 29-ந்தேதி கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் தேசிய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா மற்றும் தோடா மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.