;
Athirady Tamil News

கடன் தொல்லையால் 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை..!!

0

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரம் அடுத்த ஈ.எல் புரத்தை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் (வயது 40). இவரது மனைவி சுவாதி (35). இவர்களுக்கு ரிஷிதா (12), சித்விகா (7) என 2 மகள்கள் இருந்தனர். சத்தியேந்திர குமார் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் அக்கவுண்டராக வேலை செய்து வந்தார். சத்தியேந்திரகுமாருக்கு நிறைய கடன் தொல்லை இருந்துள்ளது.

இதனால் அவர் வாங்கும் சம்பளம் முழுவதும் வட்டிகட்டி வந்துள்ளார். குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவாதி மட்டும் சென்று இருந்தார். சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் வீட்டில் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை சுவாதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. தனது கணவரின் செல்போனை தொடர்பு கொண்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுவாதி இது குறித்து ராஜ மகேந்திரவரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. அங்குள்ள ஏரிக்கரையின் மேல் சத்தியேந்திர குமார் மற்றும் ரிஷிதா, சித்விகா ஆகியோர் காலணிகள் இருந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது தந்தை, 2 மகள்கள் உடல்கள் பிணமாக மீட்கப்பட்டன. கடன் தொல்லையால் சத்தியேந்திர குமார் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.