;
Athirady Tamil News

கொடிகாமத்தில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியை சேர்ந்த தங்கவேலு மோகனச்சந்திரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேட்டைக்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை கட்டுத் துவக்குடன் சென்ற வேளை அது தவறுதலாக வெடித்ததில் , படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.