;
Athirady Tamil News

விமானப்படை வீரர் உட்பட இருவர் கைது!!

0

சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து டி-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 மற்றும் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் குருநாகல் மற்றும் ரிதிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.