;
Athirady Tamil News

பிலிப்பைன்சில் ராணுவத்தினர் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!!

0

தென் கிழக்கு ஆசியாவின் தீவு நாடான பிலிப்பைன்சில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஆனது இங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. அதுபோல அரசுக்கு எதிராக இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் கிராமப்புறம் மற்றும் ராணுவ வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்படுகிறது.

இந்த நிலையில் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 20 பேர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். இதனையடுத்து கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.