;
Athirady Tamil News

கொழும்பில் சீனப் பெண் ஒருவர் அதிரடியாக கைது ; விசாரணையில் வெளியான தகவல்

0

கொழும்பில் மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாக கூறி 1.5 மில்லியன் ரூபாய் பணத்தையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறி 191,600 ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக சீனப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு மோசடி புலனாய்வு பணியக அதிகாரிகள், சந்தேகநபரான பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் 54 வயதுடைய சீன நாட்டவராகும். மோசடி தொடர்பில் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.