;
Athirady Tamil News

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: பொலிஸார் குவிப்பு

0

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.