;
Athirady Tamil News

14 ஊடகவியலாளர்களை கைது செய்த வெனிசுலா அரசாங்கம்

0

அமெரிக்க இராணுவ படைகள் வெனிசுலா தலைநகரை தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ததையடுத்து ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி வெளியிட்ட 14 ஊடகவியலாளர்களை வெனிசுலா அரசாங்கம் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஊடகவியளாலர்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளுடன் தொடர்புடைய ஊடகவியளாலர்கள் என வெனிசுலா ஊடகத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் விசாரணைகளுக்கு பிறகு சில ஊடகவியளாலர்கள் விடுவிக்கப்பட்டதுடன் , அவர்களில் ஒருவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெனிசுலா ஊடகத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.