;
Athirady Tamil News

சுரங்கத்தில் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் பலி

0

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு பரவியதாகக் கூறப்படுகிறது.

இத்துயர சம்பவத்தில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட மேலும் 25 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.