;
Athirady Tamil News

பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 5 நாள்களில் 42 பேர் பலி!

0

பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது. ‘ஆபரேஷன் காஸாப் லில் ஹக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை சுமாா் 352 தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை (பிப். 26) இரவு பாகிஸ்தான் தொடங்கிய இந்தப் போா் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் பிப். 26 – மார்ச் 2 வரையிலான ஐந்தே நாள்களில், குடிமக்கள் 42 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்ட முகமை இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இருநாட்டு அரசுகளும் சண்டையைத் தவிர்த்து தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண கோரிக்கை வலுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.