நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்று(25) அதிகாலை கர்மாரம்பக் கிரியைகள் ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.50 மணி முதல் 11 மணிவரையுள்ள சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.