;
Athirady Tamil News

சண்டிலிப்பாயில் 35 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – காசோலைகளை வழங்கி வைத்த பவானந்தராசா எம்.பி

0

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்,சிறிபவானந்தராசா வழங்கி வைத்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது .
மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ்  2009ஆம் ஆண்டிற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு, நீண்டகாலமாக நிரந்தர வீடின்றி வாழ்ந்து வருபவர்களில் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கு தலா 20 இலட்ச ரூபாய் பெறுமதியான வீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதலாவது கட்டமாக உதவி தொகையில் 4 இலட்ச ரூபாய்க்கான காசோலைகள் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.