;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

0

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரமாக நீடித்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு 22 போ் உயிரிழந்தனா்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கா்ஹாா் மாகாணத் தலைநகா் ஜலாலாபாதில் பெய்த பலத்த மழையால் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் மட்டும் 13 போ் உயிரிழந்தனா். நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பெய்து வரும் மழை, பனிப்பொழிவு மற்றும் மின்னல் தாக்குதல்களுக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.