;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் வீதியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

0

வவுனியா – கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக நேற்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணை
எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது.

அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.