;
Athirady Tamil News

180 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த 19 வயது இளைஞர் ; நம்பிச் சென்றவர்களுக்கு செய்த சம்பவம்

0

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

காதல் தூது
அந்த வீடியோக்களை பார்த்து லைக் போடும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காதல் தூது விட்டுள்ளார். வெளித் தோற்றத்தை பார்த்து இளைஞரின் குரூர முகம் அறியாமல் அப்பாவி சிறுமிகள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தனது மாய வலையில் விழுந்த சிறுமிகளை மும்பை, புனே போன்ற பெருநகங்களுக்கு உல்லாச சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். நம்பிச் சென்ற சிறுமிகளிடம் நயவஞ்சமாக பேசி அவர்களை தவறாக வீடியோ எடுத்துள்ளார்.

அதிலும், சிலரிடம் அவர்களுக்கு தெரியாமலயே ரகசியமாக அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்துள்ளார். மேலும், அந்தரங்க வீடியோக்களை காட்டி அப்பாவி சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிலரை பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், சிலரை மதம் மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் பொலிஸார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் குறித்த இளைஞன் 180 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது செல்போனில் 350-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இளைஞரின் செல்போனை பறிமுதல் செய்த பொலிஸார் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.