;
Athirady Tamil News

தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

0

சென்னை: தவெகவை ஆட்​சி​யமைக்க அழைக்​காத ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை கண்​டித்​து, தமிழகம் முழு​வதும் காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தனிப்​பெரும் கட்​சி​யாக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆட்​சி​யமைக்க 118 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. இந்​நிலை​யில், ஆட்​சி​யமைக்க அழைக்​கு​மாறு தவெக தலை​வர் விஜய், ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை நேரில் சந்​தித்து கோரிக்கை விடுத்​தார்.

அதை ஆளுநர் ஏற்​காமல், 118 எம்​எல்​ஏக்​கள் ஆதரவு இருந்​தால் மட்​டுமே அழைக்க முடி​யும் என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், எம்​எல்​ஏக்​களின் ஆதரவை நிரூபிக்க வேண்​டியது சட்​டப்​பேரவை தான்.

ஆளுநரிடம் நிரூபிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தவெக ஆட்​சி​யமைப்​பதை விரும்​பாமல், பாஜக செய்​யும் சதி என அரசி​யல் கட்​சிகள் விமர்​சித்து வந்​தன.

இந்​நிலை​யில், இந்​திய அரசி​யல் சட்​டத்​துக்கு எதி​ராக தவெக ஆட்​சி​யமைக் கூடாது என்று பாஜக அரசின் கைப்​பாவை​யாக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் செயல்​படு​வ​தாக குற்​றம்​சாட்டி காங்​கிரஸ் சார்​பில், தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்​களில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

சென்னை அண்ணா சாலை​யில், தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில், தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பங்​கேற்​று, ஆளுநர் மற்​றும் மத்​திய பாஜக​வுக்கு எதி​ராக கண்ட கோஷங்​கள் எழுப்​பி​னார்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் செல்​வப் பெருந்​தகை பேசும்​போது, “தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக தவெக வெற்றி பெற்​றுள்​ளது. ஆனாலும், தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்​கத்​தில், இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ராக பாஜக மற்​றும் அவர்​களின் கைப்​பாவை​யாக ஆளுநர் செயல்​படு​கிறார்.

அவர்​களின் இந்த செயல்​பாட்டை கண்​டித்து மாவட்ட தலைநகரங்​களில் காங்​கிரஸ் சார்​பில் மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படு​கிறது” என்​றார். ஆர்ப்​பாட்​டத்​தின் முடி​வில் கிரிஷ் சோடங்​கர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் மக்​களால் வழங்​கப்​பட்ட தீர்ப்பு ஆளுநர் மற்​றும் பாஜக​வால் சிதைக்​கப்​பட்​டுள்​ளது.

இது இந்​திய அரசமைப்பு சட்​டம், மக்​களாட்சி மீதான தாக்​குதல். இதை அனு​ம​திக்க முடி​யாது. தமிழக மக்​களின் தீர்ப்​புக்கு காங்​கிரஸ் ஆதர​வாக இருக்​கும். அதற்​காகவே காங்​கிரஸ், தவெக​வுக்கு ஆதரவு அளிக்​கிறது.

சமூக விரோத சக்​தி​கள் தமிழகத்​தில் நேரடி​யாகவோ, மறை​முக​மாகவோ நுழைய அனு​ம​திக்க மாட்​டோம். காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் யாரும் விலை போக​வில்லை அனை​வரும் ஒற்​றுமை​யாக தவெக​வுக்கு ஆதர​வாக இருக்​கிறார்​கள்” என்​றார்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் மாநில முன்​னாள் தலை​வர் கே.​வி.தங்​க​பாலு. துணைத் தலை​வர் சொர்ணா சேது​ராமன், அமைப்பு செய​லா​ளர் ராம்​மோகன், மாவட்ட தலை​வர்​ கராத்​தே செல்​வம்​ உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.