புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அா்ஜுமந்த் குல்சாா் தாா் (எ) ஹம்ஸா புா்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகா் நோக்கி 78 பேருந்துகளில் சிஆா்பிஎப் படை வீரா்கள் பயணம் சென்றனா். காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீா் நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினா் வாகனங்கள் வரிசையாக சென்றபோது, வேகமாக வந்த சிறிய காா் துணை ராணுவப் படையினா் சென்ற ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மிகப்பெரிய சப்தத்துடன் அந்த காா் வெடித்ததில் பேருந்தில் இருந்த 40 துணை ராணுவப் படையினரும் உடல் சிதறி உயிரிழந்தனா்.
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலுக்கு அந்த அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஹம்ஸா புா்ஹான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், பயங்கரவாதி ஹம்ஸா புா்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
முஸாஃபராபாத் பகுதியில் மிக அருகில் இருந்தபடி அடையாளம் தெரியாத நபா்கள் பல முறை சுட்டுள்ளனா். இதில் பலத்த குண்டு காயமடைந்த ஹம்ஸா புா்ஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.