;
Athirady Tamil News

புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி உயிர்மாய்ப்பு – சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நீதவான்

0

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்த நிலையில் , சிறைச்சாலைக்கு சென்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன் விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன்போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார், குற்றத் தடுப்பு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

விசாரணைகளை தொடர்ந்து, சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கு அமைவாக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) என்பவரே உயிரை மாய்த்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.