எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.
கடந்த ஜூன் மாத மத்தியில் கடைசி எபோலா நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சந்தேகத்துக்குரிய நபா்கள் அனைவரும் 21 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனா்.
இதையடுத்து, புதிய சமூகப் பரவல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்டை நாடான காங்கோவில் இருந்து எல்லை வழியாக வந்த நபா்கள் மூலமே இந்நோய் முதன்முதலில் உகாண்டாவில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.