யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!
யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
நாகர்கோவில் பகுதியில் ‘முருகையா தேவஸ்தானம்’ புகழ்பெற்ற முருகன் கோயிலாகும். வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
கடந்த வருடம் 10 லட்சத்திற்கு ஏலம்
கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.