அமெரிக்கா-கனடாவை தொடர்ந்து மேலும் 3 நாடுகளில் பறந்த மர்ம பொருள்!!
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. பின்னர் அமெரிக்காவில் வானில் பறந்த மேலும் இரண்டு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.…
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் –…
தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்ள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், தேவராஜன் என்பவர் வழக்கு…
கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்!!
கனடாவின் மிசிகாகா மாகாணத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதி இருந்தனர். இச்சம்பவத்துக்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
துருக்கி நிலநடுக்கம்- இடிபாடுகளில் இருந்து 5 பேர் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!!
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே கட்டிட இடிபாடுகளில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட…
பொருளாதார வேலைத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம் – ஹர்ஷ டி…
நாட்டின் எதிர்காலத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தினை சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்ற போதிலும் , அதன் சகல…
நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..! (மருத்துவம்)
நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.
'வாழ்வதற்காக உண்டனர்!…
பாதாளத்தை நோக்கிய 75 ஆண்டுகள் !! (கட்டுரை)
கடந்த நான்காம் திகதி நடைபெற்ற இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், முன்னைய வருடங்களின் சுதந்திர தின நிகழ்வுகளைப் போல் ஜொலிக்கவில்லை. வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் முன்னர் போல் தேசிய கொடி பறப்பதை காணக்கூடியதாக…
தேஷபந்து விவகாரம்: நீதிமன்றின் உத்தரவு !!
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அவருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில்…
ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் எவரையும் பதவி நீக்கம் செய்யாது !!
குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என்று ஜனாதிபதி…
குறைந்த விலையில் TSP உர விநியோகம் !!
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் சிறு போகத்தில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ட்ரிபிள் சுப்பர் பொஸ்பேற் (TSP) உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…
நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது கடமை !!
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், எமது எதிர்கால…
காதலர் தினம்- சிங்கிள்ஸ்களுக்கு போனஸ் அறிவித்து அசத்திய பிலிப்பைன்ஸ் மேயர்!!
பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் லூனா நகரத்தின் மேயர் மாட் புளோரிடோ காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தி உள்ளார். சிங்கிள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக மேயர் தனது பாராட்டுக்களுடன்…
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாதா…? வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி!!
புதிய கல்விக் கொள்கையின்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது என சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 'புதிய கல்விக் கொள்கைக்கு சில மாற்றங்களுடன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மாற்றங்களின்படி, இனி 10ஆம்…
சுவிட்சர்லாந்தில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்த திட்டம்- வெடிகுண்டுடன் வாலிபர்…
சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னேவில் உள்ள பாராளுமன்றத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வாலிபர் சுற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சோதனை செய்தபோது குண்டு துளைக்காத ஆடை…
மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்- மொபைல் எண்களுக்கு வரும் போலி…
மின் கட்டணம் செலுத்த தவறுவோரின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என்று, கடந்த சில மாதங்களாக போலியான தகவல் பரவி வருகிறது. மக்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இந்த தகவல் வலம் வருகிறது. 'வாடிக்கையாளர்கள்…
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு!!
நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர்.…
சரக்கு ரெயில் காணாமல் போனதாக வைரலாக பரவும் செய்தி… விளக்கம் அளித்த ரெயில்வே…
நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரெயிலை காணவில்லை என இணையதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மிஹான் சரக்கு மையத்தில் இருந்து கடந்த 1 தேதி பல கோடி ரூபாய் மதிப்பிலான…
ஏர் இந்தியா போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவில் 1 மில்லியன் வேலைவாய்ப்பை உருவாக்கும் –…
அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்களை இந்தியா வாங்குகின்றது. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.…
இந்திய விசா மையத்துக்கு தற்காலிக பூட்டு!!
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு பதிவான 'பாதுகாப்பு சம்பவம்' காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
உக்ரைன் பிரச்சினைக்கு இந்தியாவால் தீர்வு காணமுடியும் – பிரான்ஸ் அதிபர்!!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனுக்கு…
அதானி விவகாரத்தில் கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?: மத்திய அரசுக்கு காங்கிரஸ்…
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ்…
துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது!!
துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து…
2021-22-ம் ஆண்டில் பா.ஜ.க. ரூ.614 கோடி நன்கொடை பெற்றுள்ளது!!
ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.), தேசிய கட்சிகள் பெற்றுள்ள நன்கொடைகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் 2021-22-ம் ஆண்டில் தேசிய கட்சிகள் 7 ஆயிரத்து 141 நன்கொடைகள் மூலம், ரூ.780.774 கோடி பெற்றுள்ளன. இதில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல்…
லொட்டரி பணத்தில் முன்னாள் மனைவிக்கு வீடு -இரண்டாவது மனைவியின் அதிரடி !!
லொட்டரியில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியில் முன்னாள் மனைவிக்கு வீடு வாங்கிக் கொடுத்ததை அறிந்த இரண்டாவது மனைவி, கணவனை விவாகரத்து செய்வதாக தெரிவித்து நீதிமன்ற படியேறியுள்ளார்.
இந்த பரபரப்பு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
ஸோ என்ற…
இன்று முதல் 66% இனால் மின் கட்டணம் அதிகரிப்பு!!
இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு…
வெடுக்குநாறி மலைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும்…
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும்…
எதிர்வரும் சிறு போகத்தில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் TSP உரம் விநியோகிக்கப்படும்!!
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய பிரச்சினைகள் தொடர்பாக கடந்த…
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் ஜனாதிபதியை சந்தித்தார்!!
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தார்.
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் நான்கு…
சரத்பவார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம்: பட்னாவிஸ் பகீர்…
மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து…
கனடாவில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து – மூவர் உயிரிழப்பு !!
கனடாவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடாவின் இட்டாபிகொக் பகுதியின் 427ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய…
கோவை கார் குண்டு வெடிப்பு- தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்களில் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி…
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சுமார் 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று…
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி !!
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளதாக தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு,
24 காரட் 1 கிராம் 23,760 ரூபாய்
24 காரட் 8 கிராம் (1 பவுன்) 190,100…
சனத் தொகையை அதிகரிக்க சீனாவின் அதிரடி அறிவிப்பு !!
சீனாவில் சடுதியாக குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சீன அரசு, அந்நாட்டு இளைஞர்களை விந்தணு தானம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.
அண்மைய கொரோனா தொற்றால் பெருமளவானோர் உயிரிழந்தமை மற்றும் பிறப்பு வீதம் குறைவடைந்தமை காரணமாக…
கொலை குற்றச்சாட்டில் 16 வயது சிறுவர்கள் கைது !!
வெலிபென்னவில் 34 வயதுடைய நபரை நேற்றிரவு தலைக்கவசத்தால் அடித்து கொலைசெய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.