;
Athirady Tamil News

கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங்க முயற்சி!!

விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

பொலிஸ் ஊரடங்கு எனும் முறைமை சட்டத்தில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாளைய தினம் (9) ஒன்றுகூடவுள்ள மக்களை தடுக்கும்…

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

டேட்டா சேவைகளை முடக்குமாறு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அரச தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தமது பிரதான வருமானமீட்டும் பிரிவாக டேட்டா பிரிவு காணப்படுவதால் தற்போதைய சூழலில் அந்த வருமானத்தை இழக்கும்…

பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றவற்றுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு…

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்க்கொழும்பு,…

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நேரடியாகக் கேட்டால், தற்போதைய நெருக்கடி ஜனாதிபதியால் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் இந்த…

அனைத்து மருந்தகங்களும் நாளை மூடப்படும்!!

நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களை நாளை (09) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தற்போதைய போக்குவரத்து சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை…

ஜனாதிபதி கோட்டா அதிரடி அறிவிப்பு !!

''எரிவாயு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, .தற்போதைய நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று அதிகரிப்பு !!

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று (08) அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் ரயில்வே கட்டண அதிகரிப்புக்கான அறிவிப்பு இன்று (08) வெளியானது. எனினும், கட்டண அதிகரிப்பானது எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படுமென ரயிவே…

வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் கைது: பொலிசார் அதிரடி!!…

வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று (08.07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு…

பங்கீட்டு முறை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை- யாழ் அரசாங்க அதிபர்!!

எரிபொருள் நெருக்கடிகள் குறித்தும் அதனை பங்கீட்டு முறை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இன்றைய தினம் யாழ் .மாவட்ட…

6 மாதங்களில் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்!!

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மருத்துவ பேரவையின் தரவுகள் பிரகாரம், இந்த…

களனியில் பாரிய போராட்டம் ஆரம்பம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்தனர். களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஜனாதிபதி…

கடமையிலிருந்து விலகிய இபோச பணியாளர்கள் !!

இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் இன்று (8) நண்பகல் 12 மணி முதல் கடமையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கான போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், கடமைக்கு செல்லப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை…

இலங்கை மின்சார சபையின் புதிய நடைமுறைகள்!

மின் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டண பட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு…

இலங்கை – இந்திய சரக்கு கப்பல் சேவையில் காங்கேசன்துறை துறைமுகம் முக்கிய…

இலங்கையின் துறைமுகங்கள் பிராந்தியத்தில் மாத்திரம் அல்ல சர்வதேச கப்பல் போக்குவரத்திலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. எனவே தான் வல்லமையான நாடுகள் இலங்கையின் துறைமுகங்கள் மீது ஆர்வத்துடன் ஒப்பந்தங்களை செய்கின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி…

நாளை முதல் இலங்கைக்கு வரும் கப்பல்கள்!!

40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (09) இரவு இலங்கையை வந்தடைய உள்ளது. இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரம் அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்கமைய உரக் கப்பல்கள்…

வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது – அமெரிக்க தூதுவர்!!

வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை…

இலங்கை குறித்து இந்தியாவில் வீதி கண்காட்சியை நடாத்த நடவடிக்கை!!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்!!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்திற்கு பணிக்கு…

கஞ்சன கோப் குழுத் தலைவரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு கோப் தலைவரிடம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை ஒன்றை…

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் முரண்பாடு!! (படங்கள்)

ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் மின்சார சபை உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவிற்கு பெற்றோல் நிரப்புமாறு கோரிய போது எரிபொருள் நிலைய உரிமையாளர் மறுப்புத் தெரிவித்ததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.…

நெருக்கடிக்கு மத்தியில் இ.போ.ச ஊழியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

சேவைக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருளை பெற்றுத் தரவில்லை என்றால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை…

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் !!

முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கிடையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ்!!

தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.…

ஹிருணிகா கைதுக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கண்டனம்!!!

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்களையும் ரொஹான் ஜெயவிக்கிரம உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கைகள் ஊடாக மக்களின் குரலுக்கு முகம்…

யாழ்.நாரந்தனையில் 7 வயது சிறுமி தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!!

யாழ்.நாரந்தனை பகுதியில் தண்ணீர் விநியோக பவுசரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யசோதரன் ஜாக்சனா…

யாழ்ப்பாண கோட்டையை பார்வையிட்ட இந்திய துணைத்தூதர்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம்(7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற…

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் : ஒருவர் பலி, 3 பேர் காயம்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் சம்பவம்…

யாழ் ஐஓசி எரிபொருள் நிரப்புநிலையத்தில் இன்றைய விநியோகம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம்…

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11மணி வரை யாழ்ப்பாணம் ஐஓசி எரிபொருள் நிரப்புநிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார் அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு…

யாழ்.நகர் மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல்…

யாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல்…

இலாப நோக்கில் மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதை ஏற்க முடியாது – இலங்கை…

எரிபொருள் விலையேற்றம் முரண்பட்ட தன்மையில் உள்ளது. இலாபம் பெறும் நோக்கத்திற்காக மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் நாட்டு பிரஜை என்ற ரீதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய…