;
Athirady Tamil News

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று அதிகரிப்பு !!

0

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று (08) அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் ரயில்வே கட்டண அதிகரிப்புக்கான அறிவிப்பு இன்று (08) வெளியானது.

எனினும், கட்டண அதிகரிப்பானது எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படுமென ரயிவே திணைக்களம் அறிவித்துள்ளது.

3ஆம் வகுப்புக்கான ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்கான வாடகை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு 76,300 ரூபாயும், யாழ்ப்பாணத்துக்கு 73 ஆயிரும் ரூபாயும் அறவிடப்படுகின்றது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணிக்கவேண்டுமாயின் அதற்கான கட்டணமும் தனியாக அறவிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.