;
Athirady Tamil News

பம்பலப்பிட்டியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞர் பலி

பம்பலப்பிட்டி பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளை,…

ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடவேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச சட்டத்தின்படி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரிடம் பேசிய ட்ரூடோ காசாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ட்ரூடோ, அதே நேரத்தில்…

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி! குவியும் வாழ்த்துக்கள்

சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா - சிவானந்தன் Bodhana Sivanandan…

இலங்கை வானில் திடீரென தோன்றிய அதிசயம்! ஆர்வத்துடன் பார்த்த மக்கள்

இலங்கை வானில் நிலாவை சுற்றி பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது. இதைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர். இந்த ஒளி வட்டம் நேற்றைய  தினம் (22-12-2023) மாலை சுமார் 7.00 மணி முதல் நாட்டின் பல…

டிரான் அலஸ் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

அருட்தந்தை சிறில் காமினி எதிர்கொண்ட சாலை விபத்து தொடர்பில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சிரேஸ்ட பொலிஸ் அதிபராக இருந்தபோது, அவரிடம், கர்தினால் மல்கம் ரஞ்சித், உதவிக் கோரியதாக வெளியிடப்பட்ட கருத்து மறுக்கப்பட்டுள்ளது. பொது…

இலங்கைக்கு நன்கொடையாக மருந்துகளை வழங்கிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை…

அடுத்த ரவுண்டு துவங்கும் ராகுல்..! மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா 2.0..!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா நடந்து முடிந்த கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

அரசாங்க காணியை வழங்குவதாக கூறி பண மோசடி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து அரசாங்க காணியை தருவதாக கூறி குருநாகல் ரிதிகம மற்றும் தொடம்கஸ்லந்த பிரதேச மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம காவல்துறையினர்…

இலங்கையின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ள சீனா

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சீன…

கெஹலியவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்: அநுர தரப்பு வலியுறுத்து

சுகாதார அமைச்சரின் தலையீடு இல்லாமல், இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையை செய்திருக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள்: நோயை உடன் கட்டுபடுத்த நடவடிக்கை

மாத்தறை சிறைச்சாலையில் 08 சிறைகைதிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்…

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணக்…

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்க கனடா அரசு…

20 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 75 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் கடந்த அக்.…

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும் என்பது அருவறுக்கத்தக்கது –…

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை இது குறித்து நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி…

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கடந்த 1974ஆம் ஆண்டு Edmond எனும் மதுபான விடுதியில் Carolyn Sue Rogers என்ற நபர்…

Bank Account -ற்கு தவறுதலாக Credit ஆன ரூ.820 கோடி.., வெளிவந்த காரணம்

பொதுத்துறை வங்கியில் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக ரூ.820 கோடி கிரெடிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.820 கோடி Credit பொதுத்துறை வங்கியான UCO -ல் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட…

சீனா: சுரங்க விபத்தில் 12 போ் மரணம்

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் 12…

முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வெளியிட சதொச தீர்மானித்துள்ளது. உள்ளூர் முட்டையின் விலையேற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக…

தனுஷ்கவின் கிரிக்கட் தடை நீக்கம்: நாளை போட்டியில் பங்கேற்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின் அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக SSC கழகத்தின் கிரிக்கெட்…

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: சாம்பியன் குகேஷ்

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் 2023 செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னையில் கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வந்தது. வரும் 2024=இல்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் கைகோர்த்த புதிய விமானம்!

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எயார்பஸ் ஏ-320 விமானம் மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21) விமானம் கொண்டு…

இன்று 12 பேரை புதிதாய் நியமித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22) 12 புதிய நியமனங்கள் வழங்கி வைத்துள்ளார். அதன்படி 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார். மேலும் இந்த நியமனங்கள்…

துறவியாகும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவியின் கதாபாதிரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை- இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த திரைப்படமானது பௌத்த மதத்தை அடிப்படையாகக்…

14 பேரை சுட்டுக்கொன்ற மாணவர்! பயங்கர சம்பவத்தால் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி

செக் குடியரசில் மாணவர் ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு செக் குடியரசு நாட்டில் உள்ள Prague…

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்

கம்பளை - கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை…

யாழ் காங்கேசன்துறை ரயில் மோதி ராகமையில் ஒருவர் பலி

ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் யாழ் காங்கேசன்துறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த டீ.பீ. அத்தாநாயக்க என்ற 69 வயதுடையவராவார்.…

அமைச்சா் பதவியை இழந்தாா் க.பொன்முடி; ராஜகண்ணப்பனுக்கு உயா் கல்வித் துறை

சொத்துக் குவிப்பு வழக்கில் உயா்நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக, சட்டப்பேரவை உறுப்பினா் பதவியுடன், அமைச்சா் பதவியையும் பொன்முடி இழந்தாா். அவா் வகித்து வந்த உயா்கல்வித் துறையானது பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா்…

இலங்கையில் கொரோனாவின் புதிய திரிபு: மீண்டும் முகக்கவசம் அணியும் நிலை

JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தனது…

அணுசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை : பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம்

வடகொரியாவின் அணுசக்தி வியூகத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் தனது அணுசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அணுஆயுத ஆத்திரமூட்டல் ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தனது நாடு தயாராக இருப்பதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக…

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் மொத்தமாக அடக்கம்.., கண்ணீரில் தவிக்கும்…

மணிப்பூர் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரம் இந்திய மாநிலமான மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்த இனக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்(video)

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான…

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ்…

யாழ் தொண்டைமானாறு வாவி திறப்பு

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி திறந்து வைக்கப்பட்டது. கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும் கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டன. இதனை…