;
Athirady Tamil News

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர் நியமிப்பு..!

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (05.10.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சாலிய விக்ரமசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடிதங்கள் வழங்கி வைப்பு
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றும் தர்ஷன ரத்நாயக்க, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதங்களை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.