;
Athirady Tamil News
Monthly Archives

June 2022

எரிபொருள் பெற்றவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும் !!!

வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண…

ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதுக்குழு சந்திப்பு !!

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு…

காங்கேசன்துறை சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க அனுமதி !!

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜூலை 1 ஆம்…

முதல் 5 மாதத்தில் ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவு!!

இந்த வருடத்தில் முதல் 5 மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், 2022 மே மாதம் வரையில் சரக்கு ஏற்றுமதி வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரித்து 980.2 மில்லியன்…

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு !!

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை பத்து சத வீதத்தால் அதிகரிக்க கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று நள்ளிரவிலிருந்து அமுலாகும் வகையில் இக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பால்…

இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி..!!

3 பாராளுமன்றம், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்நிலையில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில்…

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்..!!

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம்…

ஜனாதிபதி தேர்தல்- யஷ்வந்த் சின்காவுக்கு சந்திரசேகரராவ் ஆதரவு..!!

ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது.…

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; யாழில் முதியவர் கைது !!

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 59 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, பக்கத்து…

புதிய கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டது !!

புதிய கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய்யெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். எனினும், நாட்டிற்குள் புதிய வீரியம் கொண்ட கொவிட்…

பெட்ரோல் வழங்க கோரி இ. போ. சபையின் பருத்தித்துறை சாலையினர் போராட்டம்!! (படங்கள்)

தாம் பணிக்கு வர தமக்கு பெட்ரோல் வழங்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் ( டிப்போ) போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர். வடபிராந்தியத்தில் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்…

வடபிராந்தியத்தில் இ.போ.ச பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை!! (படங்கள்)

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெற்றோல் வழங்கப்பட வேண்டும், அது வழங்கப்படாத பட்சத்தில் இன்று முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்துசபை வடபிராந்திய…

விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால்…

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய்…

திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல் – 4 இடங்களில் பாஜக 3ல் வெற்றி..!!

திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதில், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு…

ஆந்திராவில் என்ஜினீயரிங் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 11 பேர் சஸ்பெண்டு..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில்…

கேரளாவில் முதல்-மந்திரி பாதுகாப்புக்காக ரூ.33 லட்சத்தில் புதிய கார் வாங்க திட்டம்..!!

கேரளாவில் முதல்-மந்திரியாக இருப்பவர் பினராயி விஜயன். இவருக்கு அச்சுறுத்தல் இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் அனில்காந்த், முதல்வரின் வாகனத்தில் புதிய காரை சேர்க்க வேண்டும் என்று…

பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்க நாளை பேச்சு !!

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, நாளை விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பஸ் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும் அழைப்பு…

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர்!!

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனி தலைநகர் பெர்லினில், பணக்கார…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 70% ஐ மூட முடிவு !!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு…

காட்டுமிராண்டித்தனத்தை பரப்பிய கும்பல் சுதந்திரமாக நடமாடுகிறது!!

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்ட வன்னமுள்ளனர் எனவும்…

வெளிநாட்டு நாணங்கள் உங்களிடம் இருக்கின்றதா?

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தம்வசம்…

கர்நாடகாவில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி- 8 பேர் படுகாயம்..!!

கர்நாடகா மாநிலம் கோகாக் தாலுகாவில் உள்ள அக்டங்கியரா ஹலா கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் பெலகாவிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, பெலகாவியில் உள்ள கனபரகி கிராமத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பல்லாரி…

அமர்நாத் யாத்திரையால் சாதுக்கள் உற்சாகம்… பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிரச்சனையே…

தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாகவே தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள். கரடுமுரடான மலைப்பாதை வழியாக…

திருப்பதியில் தரிசனத்திற்கு அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும்…

6 மாதங்களுக்குள் தீர்வு – சஜித்!!

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 60,000 பேருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும், முதல் ஆறு மாதங்களுக்குள் நடைமுறை ரீதியான தீர்வுகளை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தியால்…

பேலியகொட பட்டிய சந்தியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி!!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத நிலைய வீதி, பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது…

நிஜவுலக கடவுள் !! (கட்டுரை)

மனிதனின் உயிர்நாடி இதயம். நம் உடலில் அனைத்து உறுப்புகளை விடவும் இது அதி முக்கியத்துவம் வாய்ந்தது; அற்புதமானது. இதயம் விரிந்து சுருங்கி எப்போதும் இடைவிடாது, தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 தடவை சுருங்கி விரியும் பணி…

நோய் எதிர்ப்புச் சக்தியை ​​அதிகரிக்க செய்யும் புதினா! (மருத்துவம்)

ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று, நார்ப்பொருள்…

காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?

தான் அறிந்த வகையில், வலிந்து காணாமல் போனோரது குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை யாதெனில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே என்று தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலைக்கு பூட்டு !!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் வைத்தியசாலைக்கு வரமுடியால் வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்…

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 399 பேர் கைது !!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். 2022ஆம்…