;
Athirady Tamil News
Yearly Archives

2022

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த முதல் முறை இதுவாகும். பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (18) காலை 10 மணிக்கு…

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

கொழும்பு - காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.…

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்!! (வீடியோ)

பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் காரணமாக இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலிஸார் போக்குவரத்தை வழமைக்கு…

ரணிலை முழுமையாக ஆதரிப்போம்: ஜீவன் !!

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பையும் வழங்குமென சபையில் தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இடைக்கால அரசாங்கத்தில் தான் எடுக்கப்போகும் அமைச்சு ஒட்டுமொத்த மலையகக்…

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!!

உலக வங்கி இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன், அந்த நிதியை பெற்றோலியக் கொள்வனவுகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அசாமுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் – முதல் மந்திரியிடம் உறுதியளித்த…

அசாம் மாநிலத்தில் 20 மாவட்டங்களில் பெய்த கனமழையால் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 46 வருவாய் வட்டத்தில் உள்ள 652 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோஜய், கச்சார் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.…

காத்திருந்த மக்களுக்கு சோகமான செய்தி !!

சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.…

’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டுமென தன்னிடம் கோரிக்கை விருத்திருந்தாத சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடும் பாராளுமன்றக் கலாசாரம் நீடித்தால்,…

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !!

முன்னர் பயங்கரவாதிகளை தடுத்து வைத்திருந்த தீவுகளில் இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் ஒளிந்துகொண்டுள்ளனர். மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் அன்புடனும் சேவை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்…

வலி கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் படுகொலை ஈகைச் சுடரேற்றி அஞ்சலி!! (படங்கள்)

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை ஈகைச் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. இன்று புதன் கிழமை(மே 18) காலை 7 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய…

யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் மீது மற்றுமொரு வன்முறை கும்பல் வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம்…

‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

எதிர்க்கட்சியில் இருந்தபோது ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ரணில், பிரதமராக பதவியேற்றவுடன் கொள்கையை மாற்றியுள்ளார். பிரதமரின் நிலைப்பாட்டை எண்ணி வெட்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்…

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!

புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து, புலிகளை பலவீனப்படுத்திய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு அத்திபாரமிட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா…

திருநெல்வேலியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில்…

’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில், ராஜபக் ஷர்களின் கைபொம்மையாக…

நொய்டா இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்க காலக்கெடு மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு..!!

உத்தர பிரதேசம், நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுர கட்டிடங்களை இடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடிபாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் அகற்றப்படும் என்று நொய்டா…

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதா? – பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த…

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை நிர்ணய நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில்…

வெளிநாட்டு யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!!

இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 40, 28 மற்றும் 23 வயதுடைய உணவக உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்கள் இருவர் என…

தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர்…

பாராளுமன்ற உறுப்பினர் கொலை – இருவர் கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் மரணம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஆகியோர் உயிரிழந்தமை…

நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி; அச்சமின்றி வாருங்கள் !!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமின்றி அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்…

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு…

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் "ஆச்சார்யராக அபிஷேகம்" நிகழ்வதனையிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் குருவருள் மற்றும் இறையருள் முன்னிற்க விஷேட தீட்ஷை,…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’!! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

மீண்டும் ரணில்!! (கட்டுரை)

இவன் முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் ஓர் அசகாயசூரனாக, ரணில் விக்ரமசிங்ஹ மீண்டுமொருமுறை பிரதமராக பதவியேற்றிருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில்…

‘அத்தியாவசிய சேவைக்கு மட்டும் அழையுங்கள்’ !!

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்சந்திர பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட இதுவரையில்…

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (17) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன்,…

மக்களுக்கு சிபெட்கோ விடுத்துள்ள கோரிக்கை !!

அத்தியாவசிய தேவைகள் தவிர, நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை (19) ஆரம்பிக்கும் என்றும் நாளை எரிபொருள்…

யாழில் முஸ்லீம் மக்களும் முள்ளிவாயக்கால் கஞ்சி வழங்கினர்!! (படங்கள்)

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால்…

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை…

வத்தளையில் புது வரிசை !!

நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இன்னும் நின்றுகொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில், வத்தளையில் புதிதாக வரி​சையொன்றில் மக்கள் இன்றிரவு நின்றிருந்ததை அவதானிக்க…

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்…

இன்று நள்ளிரவு முதல் பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை!!

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள்…

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

பாராளுமன்ற வளாகத்தினுள் இரண்டு ஊடகவியலாளர்களின் திறன்பேசிகள் (ஸ்மாட் ஃபோன்) வலுக்கட்டாயமாக இன்று (17) பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்களான பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகியோரின் திறன்பேசிகளே இவ்வாறு எடுத்துச்…