;
Athirady Tamil News
Yearly Archives

2025

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை அமெரிக்க தூதருக்கு டென்மாா்க் சம்மன்

கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை டென்மாா்க் அரசு நேரில் அழைத்து கண்டனம்…

வடக்கில் இருந்து களுத்துறைக்கு மாற்றப்பட்ட வைத்தியர் நந்தகுமார்

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன், இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக இன்று (28) கடமையேற்றுக்கொண்டார்.…

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கொலைக்கு கிடைத்த தண்டனை

விருந்துபச்சார விழாவின் போது 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி மூன்று பேருக்கு, மரண தண்டனை விதித்துள்ளார். வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு…

அதிபர் நியமனத்தில் முறைகேடு; வடமாகாண ஆளுநர் செயலகத்தின் அறிவிப்பு

கிளிநொச்சி சென்திரேசா சென் திரேசா மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக சிவசேனை அமைப்பு பிரதிநிதி ஒருவரால் வட மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இந் நிலையில் அதனை ஆராய்ந்த வடமாகாண ஆளுநர் செயலகம் குறித்த…

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியதாவது: மேற்குக் கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரின் பழைய நகரப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம்…

கூட்டு நேர அட்டவணைக்கு எதிர்ப்பு; இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிநிறுத்தம்

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில்…

பாடசாலைக்குள் 12 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ; நீதிமன்றின் உத்தரவு

அநுராதபுரத்தில் உள்ள முன்னணி கலவன் பாடசாலையில், 12 வயது மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யபட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுர தலைமை நீதவான் நாலக…

மருமகனின் குற்றத்திற்காக மாமனாரை பலியெடுத்த கும்பல் ; வெளியான தகவல்

பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று (27) இரவு நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த நபர் அவரது வீட்டிலிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பொது நிர்வாக,…

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண தலைமையில்…

கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளாட்சி…

சிரியா தலைநகரில்… இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

சிரியா தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத்தில், கடந்த ஆக.26 ஆம் தேதி, இஸ்ரேல்…

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, ஜம்முவில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 1910ம்…

காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ; சாட்சிப் புத்தகத்தை கிழித்து மென்ற நபர்

மஹவ தலைமையக காவல் நிலையத்தில், முறைப்பாட்டு பதிவு புத்தகத்தின் இரண்டு பக்கங்களைக் கிழித்து, வாய்க்குள் இட்டு மென்றதாக கூறப்படும் முறைப்பாட்டாளர் ஒருவருக்கு பிணையில் செல்ல மஹவ நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியது. இலங்கையின்…

செம்மணி செல்லவுள்ள ஜனாதிபதி ?

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழில். நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின்…

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட…

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின்…

யாழில். சுவிஸ் நாட்டவரின் பணம் திருட்டு – 08 பேர் மறியலில் ; ஐவர் தலைமறைவு

சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று…

பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!

பாகிஸ்தானில், 2 மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. அன்று முதல்…

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்திய…

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் – மக்களுடன் கால்நடைகளும் பறவைகளும் பாதிப்பு…

மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை…

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், பொன்னிற தலைமுடியுடன் பல்மோரல் அருகே தென்பட்டுள்ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்மோரல் அருகே, அவர் இளவரசர் வில்லியம்ஸுடன்…

பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி 3 பேர் பலி

இங்கிலாந்தின் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வென்ட்நொர் பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார். இந்த தொடர்பில் மேலும்…

தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபை

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள்: நான்கு நிறுவனங்கள் National System Operator (Pvt) Ltd National Transmission…

நடிகர் விஜய்க்கு இலங்கையிலிருந்து சென்ற பதிலடி

கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை…

அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவையை நிறுத்திய மற்றொரு நாடு

இந்தியா, நியூசிலாந்து வரிசையில் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவையை நிறுத்திய நாடுகளின் பட்டியலில் மற்றொரு நாடு இணைந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தேசிய அஞ்சல் நிறுவனம் 'Australia Post' அமெரிக்கா மற்றும் பியூர்டோ ரிகோவிற்கான (Puerto Rico) அஞ்சல்…

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன. குர்தாஸ்பூர் மாவட்டத்தின், தபூரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள…

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு

அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இது தொடா்பாக அந்த நாட்டுடன்…

அரிசோனாவின் கட்டிடங்களை மூடிய புழுதி புயல் – 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரை கடுமையான ஹபூப்(haboob) புழுதி புயல் தாக்கியுள்ளது. இந்த புயலை தொடர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அரிசோனாவில் சுமார் 39,000 பேர் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.…

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும்…

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்…

காசா மருத்துவமனை மீதான கொடூர தாக்குதல்: புதிய விளக்கத்தை வெளியிட்ட இஸ்ரேல்!

காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பு புதிய விளக்கம் அளித்துள்ளது. மருத்துவமனை மீது தாக்குதல் நேற்று இஸ்ரேலிய ராணுவம் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனை மீது இரண்டு ஏவுகணைகளை…

தேசபந்து தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வெளிநாட்டுப் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.…

ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளான 5 வாகனங்கள்

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, பன்வரன் வேவ பகுதியில் ஐந்து வாகனங்களுக்கிடையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும்…

வெலிக்கடை சிறைச்சாலை காணி ரணிலுக்கு சொந்தமானது ; வஜிர அபேவர்தன

விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ஐக்கிய தேசியக் கட்சியின்…

இலங்கையில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெற்றிலை எச்சில் உமிழப்படுகின்றமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட உரிய அரச…