;
Athirady Tamil News
Yearly Archives

2025

ஒரே கிராமத்தில் 17 மர்ம மரணங்கள் – தீவிர விசாரணையில் அதிகாரிகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 7 முதல் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் என்ற கிராமத்தில் 12 குழந்தைகள் உட்பட பல இறப்புகள்…

சூடானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

சூடானில் வன்முறை வெடித்துள்ள நிலையில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது. சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும்…

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன்படி, மலைப்பாங்குப் பகுதிகளில் வாகனம் ஓட்டி செல்லும் சாரதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம்…

மருந்துகளின் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை அறிமுகம்

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில்…

வலிப்பு நோயால் உயிரிழந்த 22 வயது யுவதி ; வைத்தியசாலை மீது குற்றச்சாட்டும் பெற்றோர்

பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம்,…

ஒரே நாளில் வாய்ப்பில்லை… உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முடிவுக்கு கொண்டுவருவேன் அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் பலமுறை உக்ரைன்…

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந்தி பல்லிகள், தைவானின் மத்திய…

பாடசாலை செல்லும் 7 லட்சம் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும். இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும் எனப் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய…

காஸாவை அடுத்து இன்னொரு பகுதிக்கு குறிவைத்துள்ள இஸ்ரேல்: தப்பியோடும் மக்கள்

மேற்குக் கரை நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஜெனின் அகதிகள் முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இரும்புச் சுவர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப்…

‘எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர் “துயரத்தில் சிக்கியுள்ள…

காசாவில் துப்பாக்கிகள் மரணித்திருக்கலாம் ஆனால்மஹ்மூட் அபு டல்பாவிற்கு அவர் எதிர்கொண்டுள்ள துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. யுத்தத்தின் ஆரம்பநாட்கள் முதல் கட்டிடஇடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது மனைவியனதும் ஐந்து பிள்ளைகளினதும்…

ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்தாண்டு…

2026 முதல் கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வித்துறையில் பல எதிர்காலத் திட்டங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு முறையான செயல்படுத்தல் திட்டம்…

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மரியாதையை எதிர்பார்க்கிறோம் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய…

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி குழுமம்

இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனம் முன்மொழியப்பட்ட 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை இரத்து செய்ததாக வெளியான செய்திகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை அதானி குழுமம்…

சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தும்…

சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அணிதிரட்டுதல் என்ற பிரதான நோக்குடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (24.01.2024) யாழ்.மாவட்ட…

ஈராக்கில் 9 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய சட்டம் நிறைவேற்றம்

ஈராக்கில் பெண்களுக்கு திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தை திருமண தடைச்சட்டம் 1950யில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 28 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்வதாக ஐ.நா ஆய்வறிக்கை…

யாழில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்; அவதானம் மக்களே!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

போதையில் தூங்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்

இலங்கை பொலிஸார் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் போதையில் தூங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொலிஸார்…

டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே அதிகரிக்கும் ’சிசேரியன்’!

அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமை ரத்து செய்யப்படவிருப்பதால், முன்கூட்டிய பிறப்புகளுக்கான சிகிச்சை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிறப்புசார் குடியுரிமை சட்டத் திருத்தப்படி, வருகிற பிப்ரவரி 20…

பிரித்தானியாவைத் தாக்கும் புயல் Eowyn… ரயில் சேவைகள் ரத்து, சிவப்பு எச்சரிக்கை…

இயோவின் புயல் காரணமாக ஸ்கொட்லாந்தில் வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் மணிக்கு 100 மைல் வேக காற்று வீசக் கூடும் என்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய வேண்டாம் Eowyn…

நியாயம் கோரி நீதிமன்றம் சென்றார் மஹிந்த!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்…

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்றவர்கள்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான பரமேஸ்வரன் பிரசோதன் புலமை பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளை பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் 220 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் , 134 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.…

மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலையில் விபத்து! 8 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர். பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில்…

யாழில் மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட இளம் தாயான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு நேற்று…

இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபா

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும், உள்ளூர் சந்தைகளில் 1,800 ரூபாவாகவும்…

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்: பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்

உக்ரைன் போரில், உக்ரைன் கவச வாகன தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் பிணவறையில் திடீரென கண் விழித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் உக்ரைன் போரில், கவச வாகனம் ஒன்று தாக்கியதில் தூக்கி…

யாழ் . பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம்…

ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி: இதற்காகத்தான்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் உக்ரைன் ஜனாதிபதி. ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துகொண்ட ஜெலென்ஸ்கி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றுவரும் உலக…

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.…

தில்லியில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. தில்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக…

மனைவியுடன் எடுத்த படத்தால் நக்சல் தலைவர் அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொன்றது ராணுவம்

சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 20 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சலைட் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயராம் ரெட்டி என்பவரும்…