தேர்தலின் பின்னரான சூழலும், அரசியல் வியாபாரமும்..அலசல்!

தேர்தலின் பின்னரான சூழலும், அரசியல் வியாபாரமும்..அலசல்!
பெரும் எதிரபார்ப்புக்களுக்கும்,அவதூறுப் பரப்புரைகள், போலி வாக்குறுதிகள் கண்துடைப்பு வித்தைகள் என தமிழ்நாட்டு அரசியல் போல் கோமாளிக் கொள்கை விளக்கங்களும் குவிந்த ஒரு தேர்தலாக ஊராட்சிசபை தேர்தல் திருவிழா இனிதே நிறைவேறியது.
சிங்கள இனவெறித் தேசியமும் தமிழின தேசியத்திற்குமான கருத்தியல் அரசியல் போராக இந்ததேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அடித்த அனுர அலையின் வெற்றிக் கழிப்பில் திழைத்த சிங்களதேசம் நாடாளுமன்ற தேர்தலை அவசரமாக அறிவித்து அதிலும் ஓரளவு வெற்றி கண்டது தமிழர் தாயகப்பகுதியில் போலித்தேசியம் பேசுகின்றார்கள் என குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு இந்த கதை முடிந்தது எனி நாடும் எங்களது ஊரும் எங்களது என்ற கோசத்தோடு ஊராட்சித் தேர்தலை அவசரமாக அறிவித்தது அரசு.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வடகிழக்கில் பெற்ற வாக்குவீதம் அப்படியே கூடும் என தப்புக்கணக்கு போட்டு கிளீன் சிறிலங்கா கனவோடு களமிறக்கியது. பல கனவான்களை அவர்களும் ஏற்கனவே அடித்த அனுர அலையில் தமிழ்த்தேசியம் அள்ளுண்டு போய்விடும், அடுத்த தவிசாளர் ஐயா தான் என கொலரை தூக்கிவிட்டு கனவுலகில் மிதந்தார்கள்.
17சபைகளையும் நாம்தான் ஆழுவோம் என இதெண்டுவோம் புகழ் யங்குமரன் ஊடகங்களில் உருட்டினார், ஜட்டிபுகழ் அமைச்சரோ எல்லாவற்றிற்கும் மேலாக கூவித் திரிந்தார், யாழ்மேயர் வேட்பாளரோ அடுத்த நான்கு வருட யாழ்ப்பாணத்தின் மீட்பராக உலாப் போனார் ஆனால் தேர்தல் முடிவிகளோ தலைகீழாக மாறி “பட்டுவேட்டிக்கனவில் இருந்தவர்களின் கட்டியிருந்த கோவணமும் களவு”போன கதையாக மாறி தமிழினம் தலை குனியுமேயன்றி சாயாது என தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தி ஜே வி பியின் செவிட்டில் ஓங்கி அறைந்திருக்கிறது (ஓடுறா அங்கால மூமென்ற்)
சில தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும்பாலும் தம்முடைய பலத்தை நிரூபித்திருக்கின்றனரே தவிர ஒற்றுமையை நிலை நாட்டவில்லை ஏனென்றால் ஏராளமான சபைகளில் வென்றும் ஆட்சி அமைப்பதில் இழுபறிநிலை நீடிக்கின்றது, இந்த நிலை தொடருமானால் ஜே வி பி இலகுவாக சபைகளை கைப்பற்றும் உறுப்பினர்களை விலைக்கு வாங்க பகீரதப் பிரயத்தனம் செய்யும், ஏன் கவர்ச்சி மிகு உத்தரவாதங்களை வழங்கி முடிந்தால் சில லட்சங்களை கையூட்டாக குடுத்தேனும் சபைகளை கைப்பற்றும்.
எனவே தமிழ்த்தேசியக்கட்சிகள் இனிமேலாவது ஒற்றுமையை நிலைநாட்ட ஒன்றுபட்டு விட்டுக் குடுத்து அபிவிருத்திகளை மேற்கொண்டால் நல்லது இல்லாவிடின் மாகாணத் தேர்தல்களில் தமிழ்மக்களால் மரண அடி வாங்கும் என்பதில் வேறுகருத்துகள் இல்லை.
-தீவகன்-