;
Athirady Tamil News

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)
##############################

புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில் பிறந்து சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் பிரசன்னா மற்றும் திவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. பிரசன்னா திவாநந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.இனயா அவர்களின் முதலாவது பிறந்ததினம் தாயகத்தில் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் சார்பில் இனிதாக கொண்டாடப்பட்டது.

இதேவேளை அன்றையதினம் சுவிஸில் உள்ள தனது வாசல்ஸ்தலத்தில் செல்வி.இனயா தனது முதலாவது பிறந்த தினத்தை அன்பு பெற்றோரான பிரசன்னா, திவாநந்தி மற்றும் சித்தப்பா சித்தியான சாரூசன், சங்கீதா தாத்தா பேரின்பநாதன் மற்றும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார்கள் என்பதும்,

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்மழை, மற்றும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையால் மிகவும் கஸ்ரத்துக்கு மத்தியில் வாழும் கிராமங்களை சேர்ந்த மக்களை கணக்கில் கொண்டு வவுனியா ஆசிரியர் சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று, விசேட அசைவ மதிய உணவு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் செல்வி. அனயாவின் பெற்றோரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டதும்.

அன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு முதல் நிகழ்வாக அப்பாடசாலை தரம் ஐந்து முதல் பதினொன்று வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் விசேட அசைவ மதிய உணவும், குளிர்பானமும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கி வைத்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக வவுனியா சமளங்குளம், எல்லப்பர் மருதங்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமம், இத்திகுளம், முருகனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கோவில்குளம் வவுனியா இந்தக் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம், முருகனூர் சாரதா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளில் “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்றையதினம் இரண்டாவது நிகழ்வாக நடைபெற்றதுடன், இதுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை பிரசன்னா மற்றும் திவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. பிரசன்னா திவாநந்தி தம்பதிகள் வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வில் வவுனியா சமளங்குளம், எல்லப்பர் மருதங்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமம், இத்திகுளம், முருகனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” மாணவ,மாணவிகள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இருந்து நிகழ்வு நடைபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மண்டபம் வரை தவில்,நாதஸ்வர வாத்தியத்துடன் பொதுமக்களும் கலந்து கொள்ள ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அழைத்து வரப்படட மாணவ மாணவிகள் மண்டப வாசலில் வைத்து சிறப்பாக வரவேற்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், மாணவர்களால் தேவார வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் மாணவியொருவரால் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் தனது முதலாவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி வசந்தமலர் கலாநீதன் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் சிறப்பாக நடைபெற்றது.

அனைவரின் உரைகளின் போதும், “இதுவே இக்கிராமங்களில் முதல்முறையாக இதுபோன்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது எனவும், அனைவரும் நகரப்பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக இந்நிகழ்வை சிறப்பாக நடத்த முழுமையான நிதிப் பங்களிப்பு வழங்கிய சுவிஸில் வாழும் திரு.திருமதி.பிரசன்னா திவாநந்தி தம்பதிகளை மனதார நன்றியுடன் வாழ்த்துவதுடன், அவரது அன்புக் குழந்தை செல்வி.இனயா நீடூழி காலம் சிறப்பாக வாழ வாழ்த்துவதுடன் இம்மாணவ செல்வங்கள் தொடர்ந்தும் கல்வியில் முன்னேற வேண்டுமெனவும், இதுக்கு நாமும் நாம் சார்ந்த அமைப்புகள், கடசிகள் ஊடாக உதவுவோம்” என்றார்கள்.

இதனைத் தொடர்ந்து வவுனியா சமளங்குளம், எல்லப்பர் மருதங்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமம், இத்திகுளம், முருகனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” மாணவ,மாணவிகள், தமது எதிர்கால கல்வித் தேவைக்கான பெறுமதியான பணப்பரிசிலும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வை சிறப்பாக ஒழுங்குபடுத்தி செய்தமைக்காக ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி வசந்தமலர் கலாநீதன் அவர்களுக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி உறுப்பினர் திருமதி.ஜெஷ்மின் ஹென்றி பெரேரா அவர்களினால் மலர்மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதுடன் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி வசந்தமலர் கலாநீதன் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மற்றும் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை முன்னாள் தவிசாளருமான யோகன் எனும் திரு.யோகராஜா, சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு.க.கனேஸ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் திரு.காண்டீபன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி உறுப்பினர் திருமதி.ஜெஷ்மின் ஹென்றி பெரேரா, சமளங்குளம் RDS தலைவர் திரு.J.கிருசாந்தன், பொருளாளர் திரு.தி.கஜாநீதன், சமளங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தலைவர் திரு.T.தியாகராசா, பொருளாளர் திருமதி. உ.பொன்னான், சமளங்குளம் மூத்த உறுப்பினர் திரு.S.சோமசுந்தரம், சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய தலைவர் திரு வினோஸ்ரீ, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி உறுப்பினர்களான திரு.கோபி, திரு.தம்பாரவி, தமிழ் எனும் திரு.தமிழ்ச்செல்வன், சமளங்குளம் கிராம சமூர்த்தி உத்தியோகஸ்தர் திருமதி.உ.கனேஸ், சமலங்குளம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி கட்சி உறுப்பினர் திரு. நா.சோமசுந்தரம், முருகனூர் RDS தலைவர் திரு.க.இராத கிருஸ்னன், ஆச்சிபுரம் சமூர்த்தி சங்க தலைவர் திருமதி.ச.கஜித்திரா, பாதுகாப்பான புலம்பெயர்வு செயற்பாட்டாளர் திருமதி.R.கமலாதேவி, மனித நேய மக்கள் ஒன்றியம் தலைவர் திரு S.பத்மநாதன், எல்லப்பர் மருதங்குளம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சி உறுப்பினர் திரு.M.செல்வன், ஆனந்தபுரம் RDS செயலாளர் திருமதி.S.துவாரகா, பொருளாளர் திருமதி.S.நாகேஸ்வரி, எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமம் RDS திரு.S.வினோ, உட்பட சமூக ஆவலர்கள் பலரும் விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் பிரசன்னா மற்றும் திவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. பிரசன்னா திவாநந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.இனயா அவர்களின் முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு பெருமளவு நிதிப் பங்களிப்பு வழங்கி, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக இந்நிகழ்வை மட்டுமல்ல பல்வேறு வாழ்வாதார உதவிகள், கல்விக்கு கரம் கொடுப்போம் போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு கோரி உள்ளனர். இவர்கள் தமது பெயரோ அன்றில் தம்மை சார்ந்த எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் இதனை மேற்கொள்ளுமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், இவற்றை பகிரங்கத்தில் தெரிவிக்கும் போதே, இவர்களை போன்று பலரும் மக்களுக்கு உதவ முன்வருவார்கள் எனும் ஒரேநோக்கிலேயே இதனை பகிரங்கத்தில் அறிவித்து உள்ளோம்.

தொடர்ச்சியாக அண்மையில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வயோதிபக் குடும்பம் ஒன்று வைத்த கோரிக்கையை ஏற்று, அவர்களின் வீட்டுக்கான கூரைக்கு தகரம், தறப்பாள் வழங்குதல் மற்றும் பிறிதொரு குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களின் வீட்டு மண்சுவர்களை சீமெந்தினால் கட்டிக் கொடுத்தல், இன்னுமொரு இரண்டு குடும்பங்களுக்கு தறப்பாள் வழங்குதல் மற்றும் உலருணவுப் பொதிகள் வழங்கல், போன்ற பல்வேறு உதவிகள் செல்வி.அனயா பிரசன்னாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி.பிரசன்னா திவாநந்தி தம்பதிகளுக்கு மாணவ ஆசிரிய சமூகம் மற்றும் தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு

இன்றைய நாளில் இனிய முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “செல்வி.இனயா பிரசன்னா” அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், கலைகளில், கல்வியில் சிறந்து உயர்வடையவும், சீரிய பண்புகளோடு, நல்ல மனிதமுள்ள புரட்சிப் பெண்ணாக பெற்றோருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும்” என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

26.12.2023

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு, “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (வீடியோ)

சுவிஸ் “செல்வி.இனயா பிரசன்னாவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.