;
Athirady Tamil News

மணிப்பூர் முதல் மும்பை வரை – ரெடியான ராகுல் காந்தி..!

0

அடுத்த ஆண்டு ஜனவரி 14 மணிப்பூர் முதல் மும்பை வரை பாத யாத்திரையை தொடங்கவுள்ளார்.

பாரத் ஜூடோ யாத்ரா
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பாரத் நியாய் யாத்ரா 2.0 -வை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி.

மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இட்ஙகளில் யாத்திரையை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

14 மாநிலங்களில்…
மொத்தமாக 6200 கீ.மீ ,14 மாநிலங்கள் 16 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த பயணம் நடக்கவுள்ளது. ஆனால், இந்த யாத்திரையில் சில மாற்றங்கள் இருக்கப்போகின்றன.

இந்த யாத்திரை முழுவதும் மக்களைச் சந்திக்கு நோக்கத்துடன் இருப்பதால் முக்கிய நிகழ்வுகளுக்கு பேருந்து பயனமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாத்திரையை தொட்ஙகி வைக்க உள்ளார் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

You might also like

Leave A Reply

Your email address will not be published.