;
Athirady Tamil News

பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒருவர் விளக்கமறியலில் !!

0

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒருவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் இன்று (31) உத்தரவிட்டார்.

தேவாநகர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைக்குண்டு வைத்திருந்தமை,பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை,மற்றும், திருகோணமலை பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்கள் பேணியமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு,

சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.