;
Athirady Tamil News

ஜப்பானில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 27 பேர் பலி..!!

0

மேற்கு ஜப்பான் நாட்டில் ஒசாகாவில் 8 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், கிளினிக்குகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

இங்குள்ள 4-வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது.

இது பற்றி அறிந்ததும் ஏராளமான தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் கட்டிடத்தின் 4-வது தளத்தில் இருந்த 27 பேர் இறந்தனர். 23 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மற்ற தளத்தில் இருந்தவர்களை அங்கிருந்து வேகமாக அப்புறப்படுத்தினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.