பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/05/1603559169-shravendra-silva-2-2-650x430.jpg)
ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான சவேந்திர சில்வா இன்று (31) இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.