;
Athirady Tamil News

சீனா உணவகத்தில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்- 8 பேர் கைது..!!

0

வட சீனாவின் ஹெபெய் மாகாணாத்தில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் பெண்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆண் நபர் ஒருவர் பெண்ணின் முதுகில் கை வைத்துள்ளார். அந்த பெண் நபரை தள்ளிவிட்டுள்ளார். இதைக்கண்ட மற்ற நபர்கள் பெண்ணை இழுத்து தரையில் தள்ளி சரமாரியாக அடித்துள்ளனர். மற்றொரு பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இததொடர்பாக, டாங்ஷான் நகரில் போலீஸ் வன்முறை தாக்குதல் மற்றும் பிரச்சினையைத் தூண்டுதல் ஆகிய சந்தேகத்தின் பேரில் போலீசார் எட்டு பேரைக் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த பெண்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சகிச்சைப் பெற்று வரும் நிலையில் இருவரும் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.