;
Athirady Tamil News

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு..!!

0

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரையிலான வலயங்களுக்கும் பி முதல் டபிள்யூ வரையிலான வலயங்களுக்கும் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

C வலயத்திற்கு காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், எம், என், ஓ, எக்ஸ், ஒய் மற்றும் இசட் ஆகிய வலயங்களுக்கு காலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.