;
Athirady Tamil News

பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு – சஜித்!!

0

திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் தமக்கு இல்லை என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறினார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக ஒழித்து விட்டது. இராணுவத்தின் ஆட்சியையே இவர்கள் தேசிய பாதுகாப்பாக கருதினார்கள்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட காரணிகளான பொருளாதார, கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளை தேசிய பாதுகாப்பாக இவர்கள் கருதவில்லை என்றார்.இதனால் உலக அளவில் ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது எனவும் கூறினார்.

தற்போது வெளிநாடுகளிடமிருந்து பிச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் நிலைக்கு நாடு வந்துள்ளது. பிச்சை எடுக்கும் நிலையில் நாட்டின் பெருமதிப்பிக்க சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் இலஞ்ச, ஊழல் செயற்பாடுகளை ஆளும் தரப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

இப்படியான ஆட்சியாளர்களுடன் ஒருபோதும் பங்காளிகளாக இணைந்து ஆட்சியை அமைக்க போவது இல்லை அவ்வாறு செய்தால் நாட்டு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது ஆகிவிடும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.