;
Athirady Tamil News

‘போர்டிங் பாசு’க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது – விமான போக்குவரத்து அமைச்சகம்..!!

0

விமான நிலையங்களில் செக்-இன் கவுண்ட்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் இருந்து சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேற்படி போர்டிங் பாஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில், ‘செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாஸ்களுக்கு சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்தில் வந்துள்ளது. இது விமான விதிகள் 1937-க்கு எதிரானது’ என்று குறிப்பிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.