;
Athirady Tamil News

தம்மிகவின் ஆசனத்துக்கு மும்முனைப் போட்டி !!

0

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலம் அறியமுடிகிறது.

அக்கட்சியின் செயலாளர் ரேணுகா பெரேரா, தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் எஸ்.அமரசிங்க ஆகியோர் இந்த ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவிடம் பல்வேறு நபர்கள் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.