;
Athirady Tamil News

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி !!

0

புத்தளம் – முந்தல் கீரியங்கள் பகுதியில், செப்டெம்பர் 20ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தரான மதுரங்குளி – நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் ( வயது 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமான அவர், தனது புது மனைவியுடன், கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்று, வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்தார். அதில் பயணித்த மனைவியும் மனைவியின் சகோதரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தரை அங்கிருந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்துள்ளனர். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.