;
Athirady Tamil News

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

0

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், சுத்போரா கிராமத்தையொட்டிய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால், ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பலியான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் யார்? என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.