;
Athirady Tamil News

நல்லூர் பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

0

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 2022ம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் மதியம் 2 மணி அளவில் நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதன்போது ஒன்பது பேருக்கு கலைஞானச் சுடர் விருதும் எட்டு பேருக்கு இளங்கலைஞர் விருதும் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.