;
Athirady Tamil News

பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!!

0

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார்.

பலாலியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது

காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த நிலையில் அவரை தேடிச்சென்ற கடற்தொழிலாளர்களால், கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து பலாலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.