;
Athirady Tamil News

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்!!

0

தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்கையில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தீர்ந்துவிட்டமையால், காதலியின் சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு சென்ற சம்பவமொன்று வேயாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு காதலன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அத்தனகல பதில் நீதவான் சம்பத் கஸ்தூரிரத்னவின் முன்னிலையில் திங்கட்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற ​அடிப்படை நீதவான் விசாரணையின் போதே இந்த சம்பவம் அம்பலமானது.

வெயாங்கொடையில் வாடகை வீடொன்றில் தனியாக இருக்கும் 20 வயதான பெண்ணின் சடலமே, காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வத்துப்பிட்டியவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்பது நீதவானின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மனைவியால் கைவிட்டு செல்லப்பட்ட இளைஞனுடன் இந்த யுவதி, காதல்வயப்பட்டுள்ளார். அதுதொடர்பில் அந்த யுவதியின் வீட்டார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அந்த இளைஞன் மீதும் அண்மையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனால் வீட்டைவிட்டு வெளியேறி சென்ற அந்த யுவதி, வெயாங்கொடையில் வாடகை அறையொன்றை எடுத்து தங்கியிருந்துள்ளார்.

வாடகை வீட்டுக்கு வரும் காதலன் மூவேளை உணவுகளையும் கொண்டு வந்து தந்துள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறே, ஞாயிற்றுக்கிழமை (19) இரவு உணவை ​எடுத்துக்கொண்டு செல்வதற்கு முன்னர், காதலியின் தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தபோதும். அழைப்புக்கு பதிலே கிடைக்கவில்லை. எனினும், வாடகை வீட்டுக்கு வந்த காதலன் பல முறை கதவை தட்டியபோதும் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.

அதன்பின்னர் சந்தேகம் கொண்ட காதலன், அந்த அறையின் கூரையின் மீதேறி, கூரையை பிய்த்துக்கு​கொண்டு அறைக்குள் இறங்கியுள்ளார். அப்போதுதான் தன்னுடைய காதலி தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு தூக்கிட்டுக்கொண்டுள்ளார் என்பதை அறிந்துகொண்டுள்ளார்.

உடனடியாக நண்பருக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரையும் வரவழைத்துக்கொண்டு காதலியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளில் எரிபொருள் இடையிலேயே தீர்ந்துவிட்டது.

சம்பவம் தொடர்பில் அந்த இளைஞன் (காதலன்) தன்னுடைய தாய்க்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். தாயின் அறிவுரைக்கு அமைவாக சடலத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, வேயாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு அவ்விளைஞன் சென்றுள்ளார் என்பதும் நீதவான் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநப​ரான காதலன் வேயாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு செல்கையில், வாடகை வீட்டின் உரிமையாளர் தனது மனைவியுடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, வாடகைக்கு இருந்த யுவதியை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனையடுத்து, சந்தேகநபரான காதலனும் அந்த வீட்டின் உரிமையாளர் அவருடை மனைவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.