;
Athirady Tamil News

யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக மஞ்சுள செனரத் பொறுப்பேற்பு!!

0

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் காலை 8.30 மணியளவில் கடமைகளை பொறுப்பைற்றுக் கொண்டார்.

இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய விஜித குணரத்ண ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற பிரவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த மஞ்சுள செனரத்ன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.