;
Athirady Tamil News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- கமல்ஹாசனிடம் ஆதரவு கோரிய காங்கிரஸ் தலைவர்கள்!!

0

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா மற்றும் காங்கிரஸ், மக்கள் நீதி மய்ய மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.