;
Athirady Tamil News

பஸ் சில்லில் சிக்கி 6 வயது சிறுமி பலி!!

0

அநுராதபுரம் – பரசங்கஸ்வெவ, கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் பயணித்த குறித்த சிறுமி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்து சில்லில் சிக்குண்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.